தொடரை கைப்பற்றுமா இந்தியா? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

இரண்டாம் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முதல் டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இந்தநிலையில், இன்று நடைபெற்று வரும் இரண்டாம் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் பின்ச் வெளியேறினார். அவருக்கு பதில் மத்தேயு வேட் கேப்டனாக ஆஸ்திரேலியா அணியை வகித்து வருகிறார்.

விளையாடும் வீரர்களின் விபரம்:

இந்தியா:

கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், டி நடராஜன், யுஸ்வேந்திர சாஹல்.

ஆஸ்திரேலியா:

டி ஆர்சி ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மத்தேயு வேட் (விக்கெட் கீப்பர், கேப்டன்), டேனியல் சாம்ஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்வெப்சன், ஆடம் ஜாம்பா, ஆண்ட்ரூ டை.