இந்திய அணிக்கு புதிய கேப்டன் ஷிகர் தவான்… வெஸ்ட் தொடருக்கான அதிரடி அறிவிப்பு…

இந்திய அணி இம்மாதம் வரும் 22ஆம் தேதி முதல் மேற்கிந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது.

அதற்கான இந்திய அணியை தற்போது BCCI அறிவித்துள்ளது. அதில் , கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா போன்ற முக்கிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், அவேஷ் கான் , பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment