இந்தியாவிற்கு முக்கியமான வாய்ப்பை கொரோனா வைரஸ் தந்துள்ளது.! – பிரதமர் மோடி உரை.!

கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு முக்கிய வாய்ப்பை தந்துள்ளது. இந்த வைரஸிற்கு பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்தவேண்டும். – பிரதமர் மோடி உரை.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து  நாடு முழுவதும் 3 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.  நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதன் பின்னர் தற்போது நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி. அதில் பல்வேறு கருத்துக்களை நாட்டுமக்களுடன் பகிர்ந்து வருகிறார். அதில் முக்கியமாக இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும், 

இந்த வைரஸ் இந்தியாவிற்கு முக்கிய வாய்ப்பை தந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். இந்த வைரஸிற்கு பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்தவேண்டும் என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.