2 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா மாயங் அகர்வால் நிதான ஆட்டம்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்து வீச முடிவு செய்தது அதன்படி களமிறங்கியது இந்திய அணி.தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் மற்றும் மாயங்  அகர்வால் களமிறங்கினர்.

லோகேஷ் ராகுல் ஹோல்டர் வீசிய பந்தில் கார்ன்வாலிடம்  கேட்ச் கொடுத்து 13 ரன்களுக்கு  தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தற்போது உணவு இடைவெளி மாயங் அகர்வால் மற்றும் விராட்கோலி களத்தில் உள்ளனர். 30 ஓவர்கள் முடிவில் இந்தியாவில் 72 ரன்களை எடுத்துள்ளது இந்திய அணி.

author avatar
Dinasuvadu desk