எந்த சோதனையாக இருந்தாலும் இந்தியா மீண்டும் வரும் என்பது வரலாறு – மோடி.!

இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சி இன்று முதல் 11-ம் தேதி வரை அதாவது மூன்று நாள்கள் நடக்க உள்ளது. உலக நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, கடந்த ஆறு ஆண்டுகளாக வரி சீரமைப்பு உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீர்திருத்த நடவடிக்கையால் விவசாயம், சிறு, குறு தொழில் துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் மற்ற நாடுகளுக்கு வழங்கப்படும். கொரோனா கட்டுப்படுத்துவதில் இந்தியா மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும், எந்த சோதனையாக இருந்தாலும் அதில் இந்தியா மீண்டும் வரும் என்பது வரலாறு. மக்களின் சுகாதார நலன் போல பொருளாதார நிலையிலும் இந்திய அக்கறை கொண்டுள்ளது. வேளாண் பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் முதலீட்டுக்கு உகந்ததாக உள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்று தெரிவித்தார்.

 

author avatar
murugan