இந்தியா – சீனா மோதல்.! 3 இந்திய வீரர்கள், 5 சீன வீரர்கள் உயிரிழப்பு.!

கடந்த பல வாரங்களாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் 6-ம் தேதி சீன எல்லையில் இரு நாட்டினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு இரு நாட்டு படைகளும் பின்வாங்கின.

இந்நிலையில்,  எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுவதாக தெரிவித்த நிலையில், லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா, சீனா ராணுவம் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும்  2 ராணுவ வீரர்கள் என 3 பேர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, லடாக் பகுதியில் நடந்த மோதலில் 5 சீன வீரர்கள் பலியானதாகவும், 11 வீரர்கள் காயமடைந்ததாகவும் சீன ஊடகம் தகவல் தெரிவிக்கின்றனர்.

author avatar
murugan