லடாக் எல்லைப் பிரச்னை! இன்று இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது

 

கடந்த சில தினங்களுக்கு முன்  லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில்  இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்தில்பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.

 அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் ரோந்து புள்ளி -15 உள்ளிட்ட பிற புள்ளிகளில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திரும்பி வந்துள்ளன. மேலும், ஆயுதங்கள், படைகளை குறைப்பது குறித்து இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடைபெற்றது என கூறப்படுகிறது.

இந்நிலையில் லடாக் எல்லைப் பிரச்னை தொடர்பாக இன்று இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.ராணுவ ஜெனரல் அதிகாரிகள் மட்டத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.