அதிகரிக்கும் வலிமை.. இன்று 3 ரபேல் போர் விமானங்கள் வருகை..!

இன்று பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை 

கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுனது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள், மற்ற விமானங்களில் இருப்பது போன்ற அனைத்து அம்சங்களும் பயிற்சி விமானங்களிலும் உள்ளது.

முதல் கட்டமாக கடந்தாண்டு ஜூலையில் 5 விமானங்களும், நவம்பரில் 3 விமானங்களும், இந்தாண்டு ஜனவரியில் 3 விமானங்கள் இந்திய வந்து சேர்ந்தன. இந்நிலையில், 4-வது கட்டமாக இன்று மேலும் 3 போர் விமானங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த விமானங்கள் அம்பாலாவில் உள்ள விமானப் படைத்தளத்திற்கு பிற்பகல் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வரும் விமானங்களுடன் சேர்த்து விமானப் படையில் மொத்தமாக உள்ள  ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

author avatar
murugan