அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிட வேண்டும் – சசிகலா

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிட வேண்டும் என சசிகலா வேண்டுகோள்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை திமுக தலைமையிலான அரசு உடனே வழங்கிட வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான அரசு, அரசு ஊழியர்களுக்கு 01-01-2022 முதல் தரவேண்டிய 3% அகவிலைப்படி உயர்வை முன்தேயிட்டு அறிவித்து, நிலுவைத்தொகையோடு உடனே வழங்கிட வேண்டும்.

தேர்தலின் போது அரசு ஊழியர்களின் பாதுகாவலன் என விளம்பரம் செய்துகொண்டு, ஆட்சி கட்டிலில் அமர்ந்த உடன் அகவிலைப்படியை முடக்கிவிட்டது. அரசு ஊழியர்கள் தான் அரசின் அச்சாணி என்பதை சிந்தித்து பார்த்து தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் பறிக்கப்பட்ட சலுகைகளை மீடனும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
Castro Murugan

Leave a Comment