தனியார் உணவங்களுக்கு சொந்தமான 34 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

தனியார் உணவகங்கள் உள்ளிட்ட 34 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக 4 தனியார் உணவகங்களுக்கு சொந்தமான 34 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. சென்னை வடபழனியில் உள்ள தனியார் உணவகத்தின் தலைமை இடத்தில் நேற்று காலை தொடங்கிய வருமான வரிச் சோதனை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கே. கே. நகர், அசோக்நகர் உள்ளிட்ட இடங்களில் தனியார் உணவகத்தின் உரிமையாளர்களின் இல்லங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது. இந்நிறுவனங்கள் வெளிநாட்டு கிளைகளில் இருந்து வரும் வருவாயை மறைத்து முறைகேடு செய்திருப்பது சோதனையில் தெரிய வந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment