கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைக்கான திறப்பு விழா – ஆளுநருக்கு அழைப்பு

கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைக்கான திறப்பு விழா அழைப்பிதழை ஆளுநர் ரவியை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.  

சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி. கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைக்கான திறப்பு விழா அழைப்பிதழை ஆளுநர் ரவியை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.