2,668 அடி உயர திருவண்ணாமலை தீபமலை தயார்.! இன்னும் சில மணிநேரத்தில் மகாதீபம்.!

திருவண்ணாமலையில் மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் இன்னும் சில மணிநேரத்தில் ஏற்றப்பட உள்ளது.

இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அதிலும் மிக முக்கியமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகும்.

இன்று மாலை 6 மணிக்கு இங்கு மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதனை காண தமிழகமெங்கிலும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திருவண்ணாமலை வந்துள்ளனர்.

மக்களின் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற போக்குவரத்து பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில மணிநேரத்தில் திருவண்ணாமலை தீப திருவிழா ஏற்றப்பட உள்ளது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment