கடந்த 2 நாட்களில் மட்டும் 54 பேருக்கு நாய் கடித்துள்ளது – மத்திய பிரதேச மருத்துவமனை!

மத்தியப் பிரதேசத்தில் உலா விதிஷா எனும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் கடந்த இரு நாட்களில் அதிக அளவில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மருத்துவமனையின் மருத்துவர் சமீர் கிரார் கூறுகையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி 30 பேர் நாய்க்கடி என்று மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும், ஏப்ரல் 15ஆம் தேதி 24 பேர் மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை எடுக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது கடந்த 2 நாட்களில் மட்டும் 54 பேருக்கு நாய் கடித்து சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும், நான்கு பேர் நாய்க்கடியால் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாய்கடித்ததால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நபர்களுக்கு முறையாக ஊசிகள் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal