#Breaking:ஷாக்…மீண்டும் எகிறிய கொரோனா;ஒரே நாளில் 8,822 பேருக்கு பாதிப்பு;15 பேர் பலி!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 6,594 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 8,822 ஆக அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32,45,517 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • மேலும்,கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 6 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,792 ஆக பதிவாகியுள்ளது.
  • அதைப்போல,கடந்த ஒரே நாளில் 5,718 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,67,088 ஆக பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 53,637 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை 1,95,50,87,271 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும்,இந்தியாவில் ஒரே நாளில் 13,58,607 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment