டெல்லியில் பாஜக 110, ஆம் ஆத்மி 100 வார்டுகளில் முன்னிலை!

டெல்லி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 110 வார்டுகளிலும், ஆம் ஆத்மி 100 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.

டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் காங்கிரஸ் 9 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மேலும், சுயேட்சை 3 இடங்களிலும், என்சிபி 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 42 மையங்களில் 20 கம்பெனி துணை ராணுவப் படையினரும், 10,000க்கும் மேற்பட்ட டெல்லி காவல்துறை அதிகாரிகளும் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment