நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகள் அனைத்துமே தமிழர்களுக்கே – சீமான்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகள் அனைத்துமே தமிழர்களுக்கே.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு பணிகளில் 90 சதவீதம் தமிழர்களுக்கே அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கலை, கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றை அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டன என்றும், ஆனால் அந்த அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ள நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.