வீடியோவை 3 நாட்களில் நீக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பேன்- அமைச்சர் மிஸ்ரா..!

நடிகை சன்னி லியோன் மற்றும் இசையமைப்பாளர் சாகிப் தோஷி ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ வீடியோவை மூன்று நாட்களில் நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

1960-ம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான கோஹினூர் திரைப்படத்தில்  இடம்பெற்றுள்ள “மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே” என்ற பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு சன்னி லியோன் ஆபாச நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் ‘இந்து உணர்வுகளை’ புண்படுத்தியதாக பல தரப்பினர் தெரிவித்தனர்.

நடிகை சன்னி லியோனின் நடனப் பாடல் குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது. தற்போது சன்னி லியோனின் பாடல் குறித்தும் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், சில மதவெறியர்கள் தொடர்ந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்துகிறார்கள். இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும்,  சன்னி லியோன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்து தெய்வங்களை இழிவுபடுத்துவதை சகித்துக்கொள்ள முடியாது என்றார்.

அதே சமயம், இந்தப் பாடலை இன்னும் 3 நாட்களில் யூடியூப்பில் இருந்து நீக்காவிட்டால், சன்னி லியோன் மற்றும் இசையமைப்பாளர் சாகிப் தோஷி மீது எஃப்ஐஆர் பதிவு செய்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த பாடல் டிசம்பர் 22 அன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan