மத்திய அரசு வேளாண் சட்டங்களை நீக்காவிட்டால் மற்ற மாநிலங்களிலும் போராட்டம் பரவும்! ராகுலின் ட்வீட்டிற்கு ஸ்மிருதி ராணி பதிலடி..!

ராகுல் காந்தி இந்திய மக்கள் மீது போரை அறிவித்து உள்ளார். பிரதமருக்கு எதிரான தனது அரசியல் செயல்பாடு பலன் தராவிட்டால் நாடே பற்றி எரியும் என எச்சரிக்கிறார்.

தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற பேரணியில் காவல்துறையினருக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டங்களை எதிர்த்து தான். அதுவும் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள எல்லைகள் மட்டும்தான். மத்திய அரசு இந்த சர்ச்சைக்குரிய சட்டங்களை இனியும் திரும்பப் பெறாவிட்டால், மற்ற மாநிலங்களுக்கும் இந்த போராட்டம் மற்றும்  கலவரம் பரவும் என மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

ராகுல்காந்தியின் ட்வீட்டர் பதிவிற்கு பதிலடி கொடுத்த ஸ்மிருதி இரானி, ‘ராகுல் காந்தி இந்திய மக்கள் மீது போரை அறிவித்து உள்ளார். பிரதமருக்கு எதிரான தனது அரசியல் செயல்பாடு பலன் தராவிட்டால் நாடே பற்றி எரியும் என எச்சரிக்கிறார். நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் ராகுலின் வன்முறை அழைப்பை யாரும் கண்டு கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.