சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை யார் வழிநடத்துவது? அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம்!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தில் ரூ. 1.60 கோடி மதிப்பிலான உயர்நிலைப்பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும் எனவும், நான் சாதாரண மாவட்ட செயலாளர் என தெரிவித்தார்.