அஜித்தை பார்த்தால் இந்த கேள்வியை தான் கேட்பேன்.! அமீர்கான் ஓபன் டாக்..

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான் தற்போது “லால் சிங் சத்தா” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்க, அமீர்கானே தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி, ஆமிர் கான் பிரபல ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டிளித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படியுங்களேன்- AK61- பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா..? வெளியான சூப்பர் தகவல்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன? என்று தொகுப்பாளர் அமீர்கானிடம் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த அவர் “ நான் அஜித்தை பார்க்கும் போதெல்லாம் , அவரிடம் உள்ள ஆற்றல் சக்தி எப்போதும் அதிகம் இருப்பதாக உணர்கிறேன்.

அதை எப்பொழுதும் பயன்படுத்தும் உத்வேகத்துடன் அஜித் இருப்பார். இந்த ஆற்றல் சக்தி எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது என கேள்வி கேட்பேன்” என ஆமிர் கான் பேசியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment