சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜீரோ வாங்கும் என்பதால் அவர்களை பாஜக பயன்படுத்த முடியாது என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்னும் சிறிது நேரத்தில் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதி கட்ட பிரச்சாரத்தை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர். இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் முக ஸ்டாலின், தற்போது திரு.வி.க.நகர் தொகுதியில் தாயகம் கவிக்கு ஆதரவு கோரி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலையிலான ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதவெறி பிடித்த பாஜகவுக்கு ஜீரோ கொடுத்தோம். அதுபோன்று சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஜீரோ கொடுக்க போறோம். அதிமுக, பாஜகவுக்கு ஜீரோ என்றால் திமுகதான் ஹீரோ என தெரிவித்துள்ளார்.
ஆகவே, 234 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெற போகிறது. வெற்றி பெற்றதும் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியவற்றை நிறைவேற்றுவோம் என கூறி அறிக்கையில் உள்ள முக்கிய சிறப்புகளை பட்டியலிட்டார். மேலும், போகின்ற போக்கை பார்த்தால் தேர்தலுக்காக இனி அதிமுகவை கூட பாஜக பயன்படுத்த முடியாது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜீரோ வாங்கும் என்பதால் அவர்களை பாஜக பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…