அக்.17 முதல் டி20 உலகக்கோப்பை போட்டி- ஐசிசி அறிவிப்பு..!

டி 20 உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 17-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை போட்டியானது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படுவதாக நேற்று  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்தார். இந்நிலையில், ஐசிசி  டி20 உலகக் கோப்பை போட்டி முதலில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டபாதிப்பை கருத்தில் கொண்டு போட்டி நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, துபாய் சர்வதேச ஸ்டேடியம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியம், ஷார்ஜா ஸ்டேடியம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானம் ஆகிய நான்கு இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டி நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan