தினந்தோறும் 6 மணி நேரம் தூங்குவேன்!பள்ளியிலே அனைத்து பாடங்களையும் படித்து விடுவேன்-தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஸ்ருதி பேட்டி

கடந்த மே மாதம்  நாடு முழுவதும்  மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1.40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.நேற்று நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியானது.
வெளியான தேர்வு முடிவில் தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 48.57 தேர்ச்சி பெற்றனர்.அதிகப்பட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி பெற்றனர் . தமிழகத்தில் ஸ்ருதி என்ற மாணவி 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக மாணவி ஸ்ருதி கூறுகையில்,எனது வெற்றிக்கு ஆசிரியர்களே காரணம் .பள்ளியிலே அனைத்து பாடங்களையும் படித்து விடுவேன். தினந்தோறும் 6 மணி நேரம் தூங்குவேன்.2 ஆண்டுகள் எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் கடுமையாக படித்தால் நீட் தேர்வில் சாதிக்கலாம்  என்று தெரிவித்துள்ளார்.