எவ்வளவு வேகமாக என்னால் ஓட முடியுமோ அதுவரை நான் விளையாடுவேன்- தோனி.!

சஞ்சய் மஞ்ச்ரேகர் தோனி தன்னிடம் போதுமான உடற்தகுதியுடன் என்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அதுவரை நான் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதியானவன் என்று கூறியதாக கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிகச்சிறந்த வகையில் அணி வழிநடத்தியவர் கேம் செஞ்சர் என்ற பல பெயர்களுக்கு சொந்தக்கா ரராக திகழ்பவர் மஹிந்திர சிங் தோனி அன்மைக் காலமாக அவருடைய ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கு தோனி தரப்பில் உறுதி செய்யப்படதா நிலையில் சமீபத்தில் 2020ம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.

இந்த நிலையில் தோனி ஓய்வு குறித்து மேனேஜர் மிஹிர் திவாகர் கூறுகையில், நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் கவனிக்கும் போது நிச்சயம் அவர் ஓய்வு பெறமாட்டார் என்பது பற்றி மட்டும் நான் உறுதியாக கூறுவேன், மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார். என்றும் கூறியிருந்தார்.

அதைபோல் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் மற்றும் தற்பொழுது வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது, தோனி வருகின்ற ஐபிஎல் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்படுவர் அவரை சாதாரணமாக எண்ணியவார்கள் இந்தாண்டு அவரது ஆட்டத்தை பார்த்து வியந்துபோவீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி திருமணநாள் அன்று நான் தோனியை சந்தித்தேன் அப்பொழுது அவர், என்னிடம் நான் போதுமான உடற்தகுதியுடன் என்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அதுவரை நான் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதியானவன் என்று நான் நினைக்கிறேன் என்று தோனி சஞ்சய் மஞ்ச்ரேகரிடம் கூறியதாக சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.