ரவுடிகள் எல்லாரையும் எனக்கு தெரியும்! மொட்டை கடிதம் அனுப்பி தொல்லை கொடுப்பேன்! ரவுடியின் மிரட்டல்!

பாலமுருகன் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது. 

சென்னை அருகே உள்ள தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர், அருணகிரி நாதர் தெருவில் பாலமுருகன் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 12-ம் தேதி, அவரது கடைக்கு வெள்ளை நிற சட்டை அணிந்த டிப்டாப்-ஆக இளைஞர் ஒருவர் வந்தார். அவர் பலமுருகனிடம், ‘நீங்கள் தீபாவளி பட்டாசு கடையை உரிமை இல்லாமல் நடத்தி வருகிறீர்கள். அதனால் எனக்கு 40 ஆயிரம் ரூபாய் மாமூல் தர வேண்டும். இல்லையென்றால் மொட்டை கடிதத்தை வேறு வேறு பெயரில் எழுதி தொல்லை கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ரௌடிகள் எல்லாரையும் எனக்கு தெரியும். எனக்கு எல்லா இடத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் இந்த பிரச்னையை விட்டுவிடுவேன்.’ என்று கூறி அவரை மிரட்டியுள்ளார். இதனையடுத்து, பாலமுருகன் இது தொடர்பாக பீர்க்கன்காரனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், கடை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வில், பணம் கேட்டு மிரட்டியவர், பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில், அவர் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. பின் போலீசார் ஜெயராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் ஜெயராமன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment