பள்ளிகளுக்கான நேரத்தை நிர்வாகமே தீர்மானிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோடை விடுமுறை முடிந்து 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

பள்ளிகள் துவங்கும் நேரம், முடிவடையும் நேரத்தில் பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை  கருதி பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும், 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment