கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பது கீழடியில் நடத்தப்பட்ட  அகழாய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது.இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இது குறித்து கூறுகையில், கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன். விரைவில் முடிவுகள் வெளியிடப்படும்.

தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகி கொண்டிருக்கிறது.அதில் தொல்லியல் துறை சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள், புதிதாய் தோண்டப்பட உள்ள இடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும் என்று  அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.