மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்..! பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா பேட்டி..!

கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் முன்னிலையில் உள்ள 136 தொகுதிகளில் 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே வேலையில், ஆளும் பாஜக முன்னிலையில் உள்ள 63 தொகுதிகளில் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தற்பொழுது வரை காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், செய்தியர்களிடம் பேட்டியளித்த பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா, பாஜகவின் வெற்றிக்காக கடந்த 4 மாதங்களாக ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தேன், கர்நாடக மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், பாஜகவுக்கு வெற்றி மற்றும் தோல்வி புதிதல்ல. இந்த முடிவுகளால் கட்சி தொண்டர்கள் பீதியடைய தேவையில்லை. கட்சியின் பின்னடைவு குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்வோம் என்று பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா கூறியுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.