தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 49 வயதான யஷ்வந்த் என்பவர் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனை இருவரையும் கடப்பாரையால் தாக்கியும், ஸ்கூட்டிரைவரால் குத்தியும் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் டிரைவராக பணியாற்றி வரும் யஷ்வந்த் என்னும் நபரின் மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இவர்களது இந்த விவகாரம் அவருக்கு தெரிய வந்ததையடுத்து தொடர்ந்து தனது மனைவியிடம் இதை விட்டுவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் மனைவி கள்ளக்காதலனுடன் வெளியில் சுற்றுவதும், தவறான உறவில் இருந்து வந்ததும் கணவருக்கு தெரிய வந்ததை அடுத்து முன்னதாகவே அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
அண்மையில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்றுள்ளனர். அப்பொழுது தனது மனைவியை சந்தித்த யஷ்வந்த் அவரிடம் தகராறு செய்ய ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவருடன் வந்து விடுவதாக மனைவி கூறியுள்ளார். ஆனால் மனைவி கள்ளக்காதலனுடன் பேசியவாறு இருந்துள்ளார்.
அப்பொழுது கணவன் போதையில் இருந்ததால் இருவரும் தவறான உறவிலும் இருக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கோபத்தின் உச்சத்துக்கு சென்ற யஷ்வந்த் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் கற்களால் தாக்கியதுடன் ஸ்க்ரூட்ரைவராலும் குத்தியுள்ளார். இதில் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் இருவரையும் அவ்விடத்திலேயே விட்டு விட்டு அந்த இடத்தை விட்டு யஷ்வந்த் ஓடி உள்ளார். ஆனால் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர் என கூறப்படுகிறது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…