சுவையான பாசிப்பருப்பு கேக் செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான கேக்குகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், நாம் உண்ணுகின்ற அனைத்து வகையான கேக்குகளையும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால், நாமே அந்த கேக்கினை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பாசிப்பருப்பு – கால் கிலோ
  • தேங்காய் பால் – ஒரு கப்
  • பால் பவுடர் – அரை கப்
  • தேங்காய் துருவல் – அரை கப்
  • முந்திரி பருப்பு – 8
  •  நெய் – தேவைக்கேற்ப
  • சர்க்கரை – 150 கிராம்

செய்முறை

முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி, பாசிப்பருப்பை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் வறுத்த பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனுடன் தேங்காய் பால் மற்றும் முந்திரிப்பருப்பை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

பின் வட்டமான தட்டில் நெய்யை தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 5 டேபிள் ஸ்பூன் நெய்யை வாணலியில் ஊற்றி அரைத்த பாசிப்பருப்பு, பால் பவுடர், தேங்காய் துருவல், சர்க்காரை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும்.

பின் அவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பிறகு துண்டுகள் போட வேண்டும். இப்பொது சுவையான பாசிப்பருப்பு கேக் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.