அந்நிய மரங்களை அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.! வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

நீலகிரியில் உள்ள 191 இடங்களிலும் மொத்த அந்நிய மரங்களையும் அகற்ற வேண்டும் எனவும், அதனை மீறினால், வனத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றம்.  

தமிழக வனப்பகுதிகளில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அகற்ற கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, அந்நிய மரங்கள் அகற்றுவது குறித்த நடவடிககைகளை கேட்டறிந்து. இதற்கு பதிலளித்த தமிழக வனத்துறை, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவி உள்ள 191 இடஙக்ளில் 53 இடங்களுக்கு டெண்டர் கோரப்பட்டது.

அதில் 16 இடஙக்ளில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு அரசுக்கு சுமார் 4 கோடி ருபாய் வருவாய் கிடைத்துள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி அமர்வு,

மொத்தமாக நீலகிரியில் உள்ள 191 இடங்களிலும் மொத்த அந்நிய மரங்களையும் அகற்ற வேண்டும் எனவும், இதற்காக 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 4 வாரகாலத்திற்குள் டெண்டர் கோரப்பட்ட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனை மீறினால், வனத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும் என எச்சரிக்கை விடுத்து வழக்கை டிசம்பர் 22க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment