பிரதமர் மோடி வருகை.! உச்சகட்ட பாதுகாப்பில் மதுரை விமான நிலையம்.! 3 நாளுக்கு அதிரடி தடை…

பிரதமர் மோடியின் தமிழக வருகையை ஒட்டி, மதுரை விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்கள் விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி தொடக்கவிழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். அதன் பிறகு இரண்டாவது முறையாக பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி தமிழகம் வர உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி , காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க்க பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளார்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி வரவுள்ளார். அங்கிருந்து மோடி, ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் செல்ல உள்ளார் இதற்காக காந்தி கிராமத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 பிரதமர் வருகையை ஒட்டி, மதுரை விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்கள் விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காந்தி புரம் தற்போது மத்திய பாதுகாப்பு படையினர் வசம் சென்றுள்ளது. அவர்கள் போக, சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதே போல, கரூர் வந்து கரூரில் இருந்து மதுரை பைபாஸ் சாலை வழியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவுள்ளதால், பைபாஸ் சாலையில் திமுகவினர் வரவேற்க்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Recent Posts

IPL2024: மழையால் இன்றைய போட்டி ரத்தானது..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…

9 hours ago

காசுலாம் போச்சு .. ஆர்சிபி-சிஎஸ்கே போட்டியை பார்க்க டிக்கெட் புக் செய்த ரசிகர் ! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !!

சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…

12 hours ago

3 நொடியில் 100 கி.மீ ஸ்பீடு.. அசுர வேகத்தில் களமிறங்கிய BMW M 1000 XR.!

சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…

13 hours ago

பிளாங்க் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க .!

Plank exersize-பிளாங்க்  உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…

13 hours ago

மற்றவர்களை கவனிப்பது என்னோட வேலை இல்லை! விமர்சனங்கள் குறித்து இளையராஜா!

சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.  இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…

13 hours ago

அத்துமீறிய இலங்கை மீனவர்கள்.. 14 பேரை கைது செய்த இந்திய கடற்படை.!

சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

13 hours ago