11 மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம்..!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெருமபாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை‌ பெய்யக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan