தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…!

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ஈரோடு , சேலம் ,தர்மபுரி, நாமக்கல், திருப்பூர், நெல்லை, குமரி மற்றும் தஞ்சை  ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு .தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில்  சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

author avatar
murugan