அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்! – இந்திய வானிலை மையம்

புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 5-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம், தெற்கு ஆந்திரா, புதுச்சேரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நடப்பாண்டு 29-ஆம் தேதி பருவமழை தொடங்கி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

29-ஆம் தேதி முதல் நாளை வரைக்கும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. மறுபக்கம் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 5-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment