மீண்டும் கனமழை.. புதிய வளிமண்டல சுழற்சி… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நாளை கனமழை பெய்ய கூடும். – வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்து தற்போது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நாளை கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், டிசம்பர் 4ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் கடற்பகுதிகளில் புதிய வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment