3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

3 நாட்களுக்கு  தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்தநிலையில் தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று  வானிலை ஆய்வு  மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.