சென்னையில் கனமழை – விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் …!

சென்னையில் விமான நிலையம் இருக்கும் மீனம்பாக்கம் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க இருக்கும் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழையால் திருச்சி,கொல்கத்தா, திருவனந்தபுரம், நாக்பூர், டில்லி ஆகிய இடங்களில் இருந்து வரும் விமானங்கள் தரை இறங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதே போல் சென்னையில் இருந்து கொச்சி, விசாகப்பட்டினம், டெல்லி,ராஜமுந்திரி, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்கள் அரை மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.