கிராமம் முழுவதையும் தடை செய்யப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க அரசு அதிகாரிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அசோக் நகர் மற்றும் நாராயணன் நகர் போன்ற பகுதிகளில் உள்ள தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதனை தொடர்நது, நிலக்கோட்டை அருகேயுள்ள ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அந்த கிராமம் முழுவதையும் தடை செய்யப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.