ரன்தீப் சிங் , ஹர்சிம்ரத் கவுர் இருவருக்கும் கொரோனா..!

காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மற்றும் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர்நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் தளர்வு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசுடைய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வந்த நிலையில் கொரோனா தொற்று நோயின் 2-வது தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாள்தோறும் கொரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது போல அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மற்றும்  ஹர்சிம்ரத் கவுர் பாதல் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
murugan