ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல்! இந்திய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியுடன் பறந்த மூவர்ண கொடி!

ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல்.

நேற்று மாலை, பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி சேனலான டான் ஹேக் செய்யப்பட்ட  நிலையில், ஒரு இந்திய மூவர்ண கொடியும்,  சுதந்திர தின வாழ்த்து செய்தியும் திரையில் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட டான் நியூஸ், திடீரென இந்தியக் கொடியும், இனிய சுதந்திர தினத்தின் உரையும் திரையில் வணிக ரீதியான ஓட்டத்தில் தோன்றிய நிலையில், சிறிது நேரம் அங்கேயே இருந்து பின்னர் காணாமல் போனதாகவும் கூறியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நிறுவனம் விசாரித்து வருவதாகவும், இறுதி முடிவுக்கு வந்தவுடன் அதன் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.