போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொலிவிய சிறைச்சாலையில் 7 கைதிகள் உயிரிழப்பு!

7 கைதிகள்  பொலிவியா நாட்டில் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் கொல்லப்பட்டனர். நோடோரியஸ் என்ற இடத்தில் உள்ள சிறைக் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கைதிகள், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

கைதிகளுக்கு ஆதரவாக அவர்களின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலவரத்தை அடக்க போலீசார் சுட்டதில், 7 கைதிகள் உயிரிழந்ததுடன் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment