#IPL2022: மீண்டும் தோல்வியை சந்தித்த சென்னை.. 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் – விருத்திமன் சஹா களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடிவந்தனர். இதில் 18 ரன்கள் எடுத்து சுப்மன் கில் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மேத்யூ வேட், 20 ரன்கள் அடித்து வெளியேறினார். சிறப்பான ஆடிவந்த விருத்திமன் சஹா அரைசதம் விளாசி 67 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக குஜராத் அணி, 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Comment