குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும்..! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…

குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சார்பில் இன்று குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வு நடைபெற்று வருகிறது.

குளறுபடிகள் : ஆனால் தேர்வு தொடங்கும் முன்னர் ஒரு சில மையங்களில் தேர்வர்களின் பதிவெண்களில் சில குளறுபடிகள் ஏற்பட்டு இருந்து, பின்னர் அவை சரி செய்யப்பட்டு சில இடங்களில் தாமதமாக தேர்வுகள் தொடங்கப்பட்டன.

இபிஎஸ் வலியுறுத்தல் : குரூப் 2 முதன்மை தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியதால் பல்வேறு குளறுபடிகளுடன் தாமதமாக தேர்வு நடந்தது. இதன் காரணமாக பல முறைகேடு நடந்ததால் தகுதி வாய்ந்த தேர்வர்கள் வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment