டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவரான‌ எல்.முருகன் சந்தித்ததை தொடர்ந்து இன்று காலை விமானம் மூலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணம் மூலம், ஆளுநர் பன்வாரிலால் பிரதமர் நரேந்திர மோடி,  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும், டெல்லியில் வெள்ளிக்கிழமை வரை ஆளுநர் தங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.