அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் பேசுவதாக ஆளுநர் வேதனை..!

அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் இரு மாநிலத்திற்கு ஆளுநர் என பேசியுள்ளார் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருதத்தரங்கை  தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், யாரையாவது திட்டுவதாக இருந்தால் கூட அழகு தமிழில் மரியாதையாக திட்டுங்கள். அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் இரு மாநிலத்திற்கு ஆளுநர் எனபேசியுள்ளார்.

இரண்டு மாநிலத்திற்கு ஒரு பெண் ஆளுநராக இருக்கிறார் என்றால் எவ்வளவு சிரமும், அதுவும் தமிழச்சி ஒருவர் இரண்டு மாநிலத்திற்கு ஆளுநராக இருக்கிறார் என்று ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும் என தெறிவித்தார்.

author avatar
murugan