மதுரை, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு வழங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாளை மறுநாள் முதல் 31-ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 கிராமங்களிலும், திருப்பத்தூரில் 13 கிராமங்களிலும், வேலூர் மாவட்டத்தில் 25 கிராமங்களிலும், சிவகங்கையில் ஒரு இடத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.