பைக் மீது அரசு பேருந்து மோதல் – கணவன் கண்முன்னே மனைவி உயிரிழப்பு!

திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர் முத்துமாணிக்கத்திடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment