சிங்கப்பூர் விசாவை நீட்டித்தார் கோத்தபய ராஜபக்சே.! இலங்கை திருப்புவது எப்போது.?!

சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சேவுக்கு ஏற்கனவே 14 நாட்கள் விசா கொடுத்ததை தொடர்ந்து, அந்த விசா காலத்தை மேலும் 14 நாட்கள் நீட்டித்து உள்ளது. 

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே , நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும், அதனால் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் காரணமாகவும் இலங்கையை விட்டு அவர் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார்.

இலங்கையை விட்டு வெளியேறிய ராஜபக்சே, மாலத்தீவு மூலம், சிங்கப்பூர் பறந்துவிட்டார். அவர் எங்கும் ஓடி ஒளியவில்லை விரைவில் இலங்கை திரும்புவார் என கூறப்பட்டு வந்தது./

இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி, சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சேவுக்கு ஏற்கனவே 14 நாட்கள் விசா கொடுத்து இருந்தது. தற்போது அந்த விசா காலத்தை மேலும் 14 நாட்கள் நீட்டித்து உள்ளதாம். ஆதலால் ராஜபக்சே இலங்கை திரும்புவதற்கு இன்னும்  காலதாமதாகும் என்பது தெளிவாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment