#Goodnews:இனி கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன்,சிக்கன நாணயச் சங்கங்களின் ஊழியர்களுக்கான கடன்தொகை உச்ச வரம்பை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.அதன்படி, கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கான தனிநபர் கடன் தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,வைப்பீடுகள் மீதான அதிகபட்ச வட்டிக்கு கூடுதலாக 2% வட்டியுடன் 120 தவணையுடன் கடனை செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.மேலும்,தனிநபர் கடனை வழங்கும் போது பணியாளர்களின் கூட்டுறவு கடன்,நிதிநிலைமையை ஆய்வு செய்து கடன் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Comment